தேமுதிக தலைமை கழகத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு
தீர்மானம்: 1
2020 மார்ச் மாதம் கொடிய நோயான கொரோனா தாக்கம் ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் தன் உயிரையும் அச்சப்பட்டாமல் பணி புரிந்த தூய்மை பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள், காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் அரசு அதிகாரிகள் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்து இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 2
விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்மை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். மத்திய அரசு பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டங்கள் முடிவுக்குவரவில்லை மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்திற்கு ஒரு குழு அமைத்து விசாரணை செய்து அதன் மூலம் நிரந்தர தீர்வு காண இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 3
சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புரெவி புயலின் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுவை மாநிலத்திலும் நெல் கரும்பு வாழை போன்ற பயிரிடப்பட்ட விளை நிலையங்களை சேதப்படுத்தியது மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயும், முதல் தவணையாக 15 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 4
பெட்ரோல் டீசல் விலை கடந்த இரண்டு மாதத்தில் நாட்களாக எந்த 44 விலை மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் 10 நாட்களில் 10 ரூபாய்க்கு மேலாக விலையேற்றப்பட்டது. கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து மோத காலமாக எந்தவொரு வருமானமும் இல்லாமல் தவித்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 5
தமிழகத்தில் ஆண்டு கொண்டு இருக்கின்ற அதிமுக அரசு 2016-ல் தேர்தல் வாக்குறுதியாக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் கடந்த வாரத்தில் ECR சாலையில் ஒரு பெண் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவரும் பொழுது காவல்துறை சோதனை செய்தபோது அந்த பெண் அரசு அதிகாரி என்று பாராமல் தகாத வார்த்தையில் பேசியதை சமூக வலைதளத்தில் அனைவரும் பார்க்கப்பட்டது இதன் விளைவு பெண்கள் குடிக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 6
காஞ்சிபுரம் சாவடியில் மாவட்டம் வாகன கட்டணம் என்பது ஸ்ரீபெரும்புதூரில் கட்டணம் சாலை உள்ள வசூலிக்கப்படுகிறது. சுங்கச் வாகன வசதிகள் சீராக இருந்தால் தான் வசூலிக்க வேண்டும். இந்த பூந்தமல்லியிலிருந்து காஞ்சிபுரம் வரை சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்ற காரணத்தினால் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைமை உள்ளது. எனவே சாலைகளை சீரமைத்து வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 7
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனைத்து பகுதிகளிலும் மழை அதிகமாக பெய்தது. அணை, ஆறு, ஏரி, குளம் அனைத்திலும் நீர் நிறைந்தது உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. மழை நீரை தேக்கிவைப்பதற்கு புதிதாக அணைகள் கட்டவேண்டும். அனைத்து ஆறு, ஏரி, குளம் போன்றவைகளை தூர்வாரி மழை செய்யவேண்டுமென்று நிறைவேற்றப்படுகிறது நீரை சேமிப்பதற்கு வழிவகை இக்கூட்டத்தின் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 8
தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதும், நேரம் வீணாவதும், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசுகள் உடனடியாக இந்த நெடுஞ்சாலைகளில் சாலைகள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம்: 9
இந்தியா ஆஸ்ரேலியா நடந்த கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர் T20 போட்டிகளில் சிறப்பான முறையில் பந்து விசி விக்கெட்டுக்களை கைப்பற்றி, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அவர்களுக்கு நிறுவனத்தலைவர் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் சார்பாகவும் பாராட்டுக்களையும் தெரிவித்து மனமார்ந்த மேலும் கேப்டன் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பல் சாதனைகளை படைக்க வேண்டுமென இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை