தென்காசி வடக்கு மாவட்டத்தில் விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்து கொண்டார்.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தினார். ராயகிரியில் கட்சி கொடியேற்றி வைத்து காட்டு நாயக்கன் சமுதாய மக்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தார். பின்னர் விவசாய நிலங்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாய தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். ராயகிரியில் பெண் குழந்தைக்கு வெற்றிச் செல்வி என பெயர் சூட்டினார். தெற்குச் சத்திரம் பகுதியில் வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்துரையாடல் செய்தார்.
சிவகிரியில் பசும்பொன் தேவர் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி., மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து மகளிர் சுய உதவிக்குழுவினருடன் சந்தித்து உரையாடினார். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஜாஸ்பர் வணிக வளாகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
வாசுதேவநல்லூர் காமராஜர் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி., மாலை அணிவித்தார். திமுக முன்னோடி முகம்மது மலைக்காயர் இல்லத்திற்கு சென்று பொறிகிழி வழங்கினார்.
மகளிர் சுய உதவிக்குழுவினர், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசும் போது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எந்த துறைகளிலும் வளர்ச்சி எட்டவில்லை. எல்லா துறைகளும் முடங்கி கிடக்கின்றன. மகளிர் சுய உதவிக்குழு, பெண் காவலர்கள் போன்றவை கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள். ஸ்டாலின் முதல்வரானதும் பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். நான்குவழிச்சாலை மாற்று வழிப்பாதையில் அமைக்கவும், செண்பகவல்லி அணை கட்டவும் ஸ்டாலின் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முத்துவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் வெங்கடேசன், துணை அமைப்பாளர் மெடிக்கல் சுந்தர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், பூமிநாதன், மகளிரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணலீலா, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாரித்துரை, முத்துசாமி, வக்கீல் வன்னியராஜா, தங்கப்பாண்டியன், பேச்சாளர் துரைராஜ், புல்லட்கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்
சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்