கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழைப்பொழிவின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளும், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை மற்றும் இராமநதி அணை ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் வரத்து முழுவதும் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (14.01.2021) இரவு மணி நேர நிலவரப்படி மேற்படி அணைகளில் இருந்து விநாடிக்கு 19385 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணாமாக பொதுமக்கள் பாதுகாப்பு நிமித்தம் ஆற்றுக்கு சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுப்பதற்கோ அனுமதி மறுக்கப்படுகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வெள்ளப்பெருக்கு தணியும் வரை தங்கியிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக சுற்றுலா நிமித்தம் அணைக்கட்டுகள், அருவிகள் மற்றும் ஆற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நாளை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் செல்ல அனுமதி இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு நிமித்தம் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்
More Stories
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை