ஜூனியர் விகடன் மீது போடப்பட்ட பொய்வழக்கு சென்னை காவல்துறைக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்.* தமிழக முதலமைச்சர் தலையிட கவன ஈர்ப்பு போராட்டம் இன்று *24-05-2002 செவ்வாய்க்கிழமை * மாலை 5 மணி சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
ஜி ஸ்கொயர் என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் புருஷோத்தமன் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 21-05-2002 அன்று அளித்த பொய்ப்புகாரில் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் , ஆசிரியர் நிருபர் ஜுனியர் விடனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சவுக்கு சங்கர் ,மாரிதாஸ் ஆகியோர் பெயர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்துள்ளனர். தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விகடன் நிறுவனமும் பதிலளித்திருக்கும் நிலையில் அதே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூடுதலாக புகாரைச் சேர்த்து காவல் துறையிடம் வழங்கியுள்ளனர். புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்த பொய்ப்புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது. புகாரில், *3வது குற்றவாளியாக “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்” என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது. * *ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோ.டு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. * கருத்துரிமையை நசுக்கும் எதேச்சதிகார போக்கைக் கண்டித்தும் காவல்துறையின் அதிகார அத்துமீறலைக் கண்டித்தும் இந்த விவகாரத்தில் *ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதலமைச்சர் உடனடியாகத் தலையிடவும் வலியுறுத்தி மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புக்கள் இணைந்து அடையாளப்பூர்வ கண்டன ஆர்பாட்டத்தை சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் (24-05-2022) செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. * பத்திரிகைகள் ஊடகங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையை கொண்டவர்கள் நன்கறிவார்கள். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் அநீதியை கண்டிப்போம். ஊடக சுதந்திரத்துக்காக உரத்த குரல் கொடுப்போம். கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்போம். எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை காத்திட குரல் கொடுப்போம்.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது