குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) இன்று 2023 மே 23, அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்
குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5-ம்நாள் நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில், 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 13,090 பேர் தகுதி பெற்றனர்.
மொத்தம் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேரை (ஆடவர் 613, மகளிர் 320) ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இறுதியாக தகுதி பெற்றவர்களின் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர் என்றார்.
செல்வி இஷிதா கிஷோர் முதலிடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
செல்வி கரீமா லோஹியா 2-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
உமா ஹரதி 4-ம் இடம் பெற்றுள்ளார். ஐதராபாத் ஐஐடி-யில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்
செல்வி ஸ்மிர்தி மிஷ்ரா 4-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் மகளிர், 11 பேர் ஆடவர்
More Stories
நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்
ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது